Friday, December 3, 2010

GOLDEN WORDS OF SWAMI VIVEKANANDA

The Biggest collections of Swami Vivekananda Quotes





  • When there is a conflict between the heart and the brain, let the heart be followed.




  • A man of intellect can turn into a devil, but never a man of heart.




  • Religion is not a theoretical need but a practical necessity.




  • Renunciation does not mean simply dispassion for the world. It means dispassion for the world and also longing for God.




  • There is no misery where there is no want.




  • The secret of life is not enjoyment, but education through experience.




  • Every new thought must create opposition.




  • Renunciation is the withdrawal of mind from other things and concentrating it on God.




  • Every man who thinks ahead of his time is sure to be misunderstood.




  • In this short life there is no time for the exchange of compliments.




  • Do not wait to cross the river when the water has all run down.




For more Quotes Download below


 

DOWNLOAD


 

Tuesday, November 30, 2010

பராக் ஒபாமா பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை

இந்தியாவிற்கு வருகை தந்த பராக் ஒபாமா அவர்கள்
இந்திய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டார்.




வேற்றுமைக்கு பதிலாக அவர் இந்தியாவின் பலத்தைக் காண்பித்தார் - இந்தியா பற்றியக் கருத்தை மாற்றினார் - அனைத்து ஜாதி, நிறம், மதநம்பிக்கையை, ஒருங்கிணைத்தார் -இன்றைய கழக வேற்றுமையை விவரமாக விளக்கினார். மிகவும் மதிப்புமிக்கவர், நம்பிக்கையானவர், என்னுடைய சொந்த ஊர்ராகிய சிக்காகோவிற்கு நூறு வருடங்களுக்கு முன்பு விஜயம் செய்தார். அவர் புகழ்ப்பெற்ற சுவாமி விவேகானந்தர் .

புனிதம், தூய்மை, அறம், ஆகியவை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் இல்லை. மற்றும் உயர்ந்த நற்ப்பன்புகளை உடைய ஆண்களையும், பெண்களையும் உருவாக்குவதே அனைத்து அமைப்புகளின் நோக்கம் என்று கூறினார்.

ஆங்கிலத்தில்


Instead of succumbing to division, you have shown that the strength of India - the very idea of India - is its embrace of all colours, castes and creeds. It's the diversity represented in this chamber today. It's the richness of faiths celebrated by a visitor to my hometown of Chicago more than a century ago - the renowned Swami Vivekananda. He said that, "holiness, purity and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character."

முழு உரையையும் காண




Obama's address to Parliament


Video




Obama's address to Parliament



Wednesday, November 17, 2010

MANASE RELAX PLEASE - சுவாமி சுகபோதானந்தா

சுவாமி சுகபோதானந்தா அவர்களின்......



"MANASE RELAX PLEASE."


[மனசே தயவு செய்து ஓய்வெடு.]


சுவாமி சுகபோதானந்தா
தெளிவு பெற்ற ஓர் ஆன்மீக குரு. "LIFE" (Living in Freedom & Enquiry Programme) மற்றும் YPL(Yogic Linguistic Programming) முறைகளை உருவாக்கியவர். பழுத்த வேதாந்த அனுபவம் கொண்ட மேலாண்மை குரு.
சுவாமிஜி இங்கிலாந்தில் அத்தாட்சி பெற்ற NPL முறை பயிற்சியாளராக இருந்தவர். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய போதனா முறைகளில் ஆழ்ந்த ஞானம் உண்டு. மகத்தான பாரம்பரிய ஆசான்களிடம் பயின்ற இவருக்கு அதிநவீன மேலாண்மை உத்திகளுடன் தொடர்ந்து வரும் தொடர்பு உண்டு. முன்னணி தொழிலகங்கள், தங்கள் அதிகாரிகளுக்காக "IN HOUSE WORKSHOP" நடத்த இவரை அழைக்கிறார்கள். சுவாமிஜியின் "LIFE" என்றபெயரில் புகழ்பெற்ற SELF DEVELOPMENT PROGRAMME துணை கொண்டு கூட:டாண்மைத் துறையில் பலரும், ஏராளமான பொதுமக்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். கூட்டாண்மைத்துறைக்கென்றே விசேசமாக HARMONY & CREATIVITY AT WORK என்ற முறையை சுவாமிஜி அமைத்திருக்கிறார். தியான முறையில் அறிவியல் கண்ணோட்டம் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இளைஞர் முகாம்களை நடத்தி வருகிறார்.
இவற்றைத்தவிர, சுவாமிஜியின் ஊக்குவிப்புடன் வழிகாட்டுதலுடனும் பிரசன்னா டிரஸ்ட், ஆதரவற்ற குழந்தைகளுக்காக பிரசன்ன ஜோதி என்ற அனாதை இல்லமும் நிர்குண மந்திர் என்ற தியானப்பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறது.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற இவரது புத்தகம் முன்பு எப்போதும் கண்டிராத சாதனை படைத்திருக்கிறது. அதன் ஒலிவடிவத்தை இங்கே தருகின்றோம்.


குரல் கொடுத்தவர்:- "நிழல்கள்" ரவி



DOWNLOAD PDF


DOWNLOAD AUDIO


PART -1


PART -2


PART -3

Thursday, October 21, 2010

வெற்றி நிச்சயம் -சுகி சிவம்

 


வெற்றி நிச்சயம்  சுகி சிவம்  எழுதிய தன்னம்பிக்கை தொடர், சிறு
சிறு கதைகள் முலமாக சொல்லியிருக்கிறார்



DOWNLOAD


இளைஞர்கள் காலம் - டாக்டர் அப்துல் கலாம்


இளைஞர்கள் காலம் என்ற தலைப்பில் நக்கீரன் பத்திரிகையில்  டாக்டர் அப்துல் கலாம் எழுதிய தொடர். இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் தொடர் ! இளைய தலைமுறைக்கான  தன்னம்பிக்கைத் தொடர்!


டவுன்லோட் செய்ய கீழே சொடுக்கவும்

DOWNLOAD



Wednesday, October 20, 2010

திபாவளி ஏன் ?

திபாவளி ஏன் ? என்ற கேள்விக்கு விடை அறிய இந்த SLIDEஐ  Download செய்யவும்

இந்த Slideல் உள்ள presentation அனைத்தும் மற்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

DOWNLOAD


 

 

Wednesday, October 13, 2010

தியானப் பயிற்சி -விவேகானந்தர்

 



சுவாமிஜி அமெரிக்காவில் தமது. சிஷ்யையான திருமதி சாரா.சி.புல் என்பவரின் வீட்டில் நிகழ்த்திய வகுப்புச் சொற்பொழிவுகளின்போது திருமதி சாரா எடுத்த குறிப்புகளின் திரண்ட தொகுப்பு.


1


நமக்கு மிகவும் உயர்ந்த குறிக்கோள் கடவுளே.அவரைத் தியானம் செய்.அப்பால் உள்ள மெய்ப்பொருளை அனைவரும் காண  முடியும். கடவுள் உண்மையானால் அவரை ஓர் உண்மைப் பொருளாக நாம் உணர வேண்டும்; ஆன்மா இருக்குமானால் நாம் அதனைக் காணவும் உணரவும் திறன் உடையவர்களாக வேண்டும்.

லட்சக்கநக்கானோருள் ஒருவரே,நான் அப்பால் செல்வேன்;இறைவனை அடைவேன் என்று கூறுகிறார்.உண்மையை எதிர்கொள்ள வல்லவர்கள் ஒருசிலரே. ஆனால் எதையாவது சாதிக்க வேன்டும்மானால் நாம் உண்மைக்காகச் சாகவும் தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு மரணம் கிடையாது.நம்மால் பிறருக்குத் தீங்கு செய்ய இயலாது என்பதை அப்போது அறிவோம். காரணம்,அவர்கள் எல்லோரும் நம்முடயவர்களே.பிறப்பும் இறப்பும் நமக்கு இல்லை.அன்பு காட்டுவது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
இந்த பிரபஞ்சம் முழுவதுமே என் உடல்; எல்லா நலமும்,எல்லா ஆனந்தமும் என்னுடையவை.ஏனெனில் எல்லாம் பிரபஞ்சத்தில் உள்ளவை, னானே பிரபஞ்சம் என்று கூறு.

நாம் சிறு அலைகளாகத் தோன்றினாலும்,முழுக்கடல் நமக்குப் பின்னால் உள்ளது. நாம் அதனுடன் ஒன்றாக உள்ளோம். எந்த அலையும் தனியாக இருக்க முடியாது.

2


வெற்றியை விரும்பும் சாதகனுக்கு மூன்று விஷயங்கள் தேவை.


1.  இந்த உலகிலும் மன உலகிலும் உள்ள சுகபோகங்களை அனுபவிப்பது பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டு இறைவனையும் உண்மையையும் மட்டுமே நாட வேண்டும்.







Friday, October 8, 2010

அர்த்தமுள்ள இந்து மதம் -கவியரசு கண்ணதாசன்

இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் என்பதை எளிய
விளக்கங்களுடன் கண்ணதாசன் போல் யாரும் சொல்ல முடியாது. நாத்திகனாக இருந்து
கம்பனை விமர்சிக்க ராமாயணம் படித்து, ஆன்மீகவாதிக மாறிப்போன ஒரு பெரும் புலவனின் சொற்பொழிவை தரவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

Download MP3


PART 1


PART 2


PART 3


PART 4


PART 5


PART 6

Tuesday, October 5, 2010

விவேகாந்தரின் விவேகக் கதைகள்

விவேகாந்தரின் விவேகக் கதைகள் என்ற புத்தகத்தை தொகுத்தவர் சுவாமி அஜராத்மானந்தர். ராமகிருஷ்ண மடம் வெளியிடு.



DOWNLOAD

Monday, October 4, 2010

Vivekananda Photo Album

India 1886 - 1893


America 1893 - 1895


England 1895-1896


India 1897-1899


America 1899 - 1900


India 1901

பகவத் கீதை – மகாகவி பாரதியார்


புத்தியிலே சார்பு எய்தியவன்,இங்கு நற்செய்கை, தீச்செய்கை


இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோக நெறியிலே


பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. (கீதை,2-


ஆம் அத்தியாயம், 50- ஆம் சுலோகம்.)


Download

Friday, October 1, 2010

அகக்கருவிகள் 36

அகக்கருவிகள் 36


பூதம் 5


மண்
நீர்
தீ
காற்று
ஆகாயம்

தன்மாத்திரை 5
ச்ப்தம்
ஸ்பரிசம்
ரூபம்
ரசம்
கந்தம்

கன்மேந்திரியம் 5

வாக்கு
பாதம்
கை
எருவாய்
கருவாய்

ஞானேந்திரியம் 5
செவி
கண்
மூக்கு
நாக்கு
மெய்

அந்தக்கரணம் 4
மனம்
அகங்காரம்
புத்தி
சித்தம்

வித்தியா தத்துவம் 7
புருடன்
அராகம்
வித்தை
கலை
நியதி
காலம்
மாயை

சிவத்டத்துவம் 5

சுத்தவித்தை
ஈச்சுரம்
சாதாக்கியம்
விந்து
நாதம்

புறக்கருவிகள் 60

பிருதிவியின் காரியம்
மயிர்
தோல்
எலும்பு
நரம்பு
தசை
அப்புவின் காரியம்
நீர்
உதிரம்
மூளை
மச்சை
சுக்கிலம்
தேயுவின் காரியம்
ஆகாரம்
நித்திரை
பயம்
மைதுனம்
சோம்பல்
வாயுவின் காரியம்
ஓடல்
இருத்தல்
நடத்தல்
கிடத்தல்
தத்தல்
ஆகாயத்தின் காரியம்
குரோதம்
லோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்

வசனாதி 5
வசனம்
கமனம்
தானம்
விசர்க்கம்
ஆனந்தம்

வாயு 10
பிராணன்
அபானன்
வியானன்
உதானன்
சமானன்
நாகன்
கூர்மன்
கிருதரன்
தேவதத்தன்
தனஞ்சயன்

நாடி 10
இடை
பிங்கலை
சுழுமுனை
காந்தாரி
அத்தி
சிங்குவை
அலம்புடை
புருடன்
சங்கினி
குகு

வாக்கு 4
சூக்குமை
பைசந்தி
மத்திமை
வைகரி

ஏடணை 3

தாரவேடணை
புத்திர்வேடணை
அர்த்தவேடணை

குணம் 3
சாத்துவீகம்
இராசதம்
தாமதம்

Thursday, August 19, 2010

ஸ்ரீ மத் பகவத் கீதை


கீதையின் பாதை
'தன்னை அழுத்தத் துடிக்கின்ற சூழ்நிலைகளில் ஓர் உயிர் தன்னை
வெளிப்படுத்தவும் நிறைநிலையை அடையவும் முயல்வதே
வாழ்க்கை' என்று வாழ்க்கையை விளக்கினார்  சுவாமி விவேகானந்தர்.



DOWNLOAD

Wednesday, August 18, 2010

அத்தனைக்கும் ஆசைப்படு



சத்குரு ஈஷா அவர்கள்  யோகாவை விஞ்ஞானக் கருவியாகப் பயன் படுத்தி பல லட்சம் மனிதர்களை மேம்படுத்தி சமூகத்திற்கும் அர்ப்பணித்தவர். அத்தனைக்கும் ஆசைப்படு! விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.

DOWNLOAD

Tuesday, August 17, 2010

A Short Life of Swami Vivekananda



சுவாமி தேஜசனந்தர் எழுதிய சுவாமி விவேகனந்தரின் வழக்கை வரலாறு சிறிய நூல்

DOWNLOAD

Thursday, August 12, 2010

Complete works of Swami Vivekananda

இந்த நூலில்  சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள், கட்டுரைகள்,கடிதங்கள்,உரையாடல்கள் உள்ளன.



DOWNLOAD

விவேகானந்தரின் பொன்மொழிகள் …

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.
நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.
இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.
வீரர்களாகத் திகழுங்கள்!
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.

*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.

*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.

*ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.

*தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

*மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

*சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.

*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

* உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.

*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

* உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.

* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

*தியானம்
எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம்
ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு
எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் .

Thursday, August 5, 2010

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Saturday, July 24, 2010