Wednesday, October 13, 2010

தியானப் பயிற்சி -விவேகானந்தர்

 



சுவாமிஜி அமெரிக்காவில் தமது. சிஷ்யையான திருமதி சாரா.சி.புல் என்பவரின் வீட்டில் நிகழ்த்திய வகுப்புச் சொற்பொழிவுகளின்போது திருமதி சாரா எடுத்த குறிப்புகளின் திரண்ட தொகுப்பு.


1


நமக்கு மிகவும் உயர்ந்த குறிக்கோள் கடவுளே.அவரைத் தியானம் செய்.அப்பால் உள்ள மெய்ப்பொருளை அனைவரும் காண  முடியும். கடவுள் உண்மையானால் அவரை ஓர் உண்மைப் பொருளாக நாம் உணர வேண்டும்; ஆன்மா இருக்குமானால் நாம் அதனைக் காணவும் உணரவும் திறன் உடையவர்களாக வேண்டும்.

லட்சக்கநக்கானோருள் ஒருவரே,நான் அப்பால் செல்வேன்;இறைவனை அடைவேன் என்று கூறுகிறார்.உண்மையை எதிர்கொள்ள வல்லவர்கள் ஒருசிலரே. ஆனால் எதையாவது சாதிக்க வேன்டும்மானால் நாம் உண்மைக்காகச் சாகவும் தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு மரணம் கிடையாது.நம்மால் பிறருக்குத் தீங்கு செய்ய இயலாது என்பதை அப்போது அறிவோம். காரணம்,அவர்கள் எல்லோரும் நம்முடயவர்களே.பிறப்பும் இறப்பும் நமக்கு இல்லை.அன்பு காட்டுவது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
இந்த பிரபஞ்சம் முழுவதுமே என் உடல்; எல்லா நலமும்,எல்லா ஆனந்தமும் என்னுடையவை.ஏனெனில் எல்லாம் பிரபஞ்சத்தில் உள்ளவை, னானே பிரபஞ்சம் என்று கூறு.

நாம் சிறு அலைகளாகத் தோன்றினாலும்,முழுக்கடல் நமக்குப் பின்னால் உள்ளது. நாம் அதனுடன் ஒன்றாக உள்ளோம். எந்த அலையும் தனியாக இருக்க முடியாது.

2


வெற்றியை விரும்பும் சாதகனுக்கு மூன்று விஷயங்கள் தேவை.


1.  இந்த உலகிலும் மன உலகிலும் உள்ள சுகபோகங்களை அனுபவிப்பது பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டு இறைவனையும் உண்மையையும் மட்டுமே நாட வேண்டும்.







0 comments:

Post a Comment